என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருமத்தம்பட்டி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் நகைகள் கொள்ளை
    X

    கருமத்தம்பட்டி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் நகைகள் கொள்ளை

    • பாபு கடந்த 30-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான உடுமலைக்கு சென்றார்.
    • கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சாரதம்பாள் நகரை சேர்ந்தவர் பாபு (வயது 39). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 30-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான உடுமலைக்கு சென்றார்.

    அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல் உள்பட 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீட்டிற்கு திரும்பிய பாபு கதவை உடைத்து மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதே பகுதியை சேர்ந்தவர் ராம நாராயணன் (40). இவர் குடும்பத்துடன் தர்மபுரியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கைச்செயின், தங்க நாணயம் உள்பட 2 பவுன் தங்க நகைகளை கொள்ளை யடித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து அவர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னூர் அருகே உள்ள அல்லிக்காரன ்பாளை யத்தை சேர்ந்தவர் விஜய்பிர காஷ் (36). போட்டோ கிராபர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவைக்கு வந்து இருந்தார்.

    அப்போது இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் பணம் மற்றும் வெள்ளி பொரு ட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×