என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூட்டிய வீட்டில் நகை- பணம் திருட்டு
- 4 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைர தோடு திருட்டு.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி அருகே ஆய்மழை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்.
இவரது மனைவி சந்திரகலா ( வயது 62). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றார். விழா முடிந்தவுடன் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந 4 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைர தோடு ஒரு ஜோடி, ரூ.1500 ரொக்கம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.
இந்நிலையில் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து சந்திரகலாவுக்கு தகவல் கொடுத்தனர்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சந்திரகலா வீட்டுக்கு வந்து பார்த்தபோது நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்தார்.
இது குறித்து அவர் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.