என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடவள்ளி அருகே வாலிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
- சிவா. தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
- சுகன்யா அந்த பகுதி மாணவர்களுக்கு, தனது வீட்டில் வைத்து டியூசன் எடுத்து வருகிறார்.
கோவை,
கோவை தொண்டா முத்தூர் அடுத்த உலியம்பா ளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் பொன்னையா என்ற சிவா. இவர் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 1 வயதில் மகன் உள்ளார்.
சுகன்யா அந்த பகுதி மாணவர்களுக்கு, தனது வீட்டில் வைத்து டியூசன் எடுத்து வருகிறார். மேலும் ஆராய்ச்சி படிப்பும் படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அவருக்கு திருப்பூரில் வைத்து ஆராய்ச்சி படிப்புக்கான தேர்வு நடக்கிறது.
இந்த தேர்வினை எழுது வதற்காக சுகன்யா, தனது கணவர் பொன்னையா வுடன், நேற்று மாலையே திருப்பூருக்கு சென்று விட்டார். மகனை அருகே உள்ள பெற்றோர் வீட்டில் விட்டு சென்றனர்.இந்த நிலையில் இன்று காலை பொன்னையாவின் தந்தை தனது பேரனுடன், வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் உடனே சம்பவம் குறித்து, தனது மகனுக்கு தகவல் தெரிவி த்தார்.அவர் உடனடியாக சம்பவம் குறித்து, தொண்டா முத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற னர். வீடு முழுவதும் ஆய்வு செய்தனர்.
அப்போது வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்ததன. இவர்கள் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், ஆள் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளை யடித்து சென்றது தெரிய வந்தது. வீட்டில் எவ்வளவு நகை இருந்தது என்பது பொன் னையாவின் மனைவி சுகன்யாவுக்கு மட்டுமே தெரியும். அவர் தேர்வு எழுதி கொண்டிரு ப்பதால், அவர் வந்த பின்னரே எவ்வளவு நகை கொள்ளை போனது என்பது தெரியவரும். தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் பொருத்த ப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.






