search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு
    X

    நெல்லையில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு

    • மீனா தனது மகனுடன் தாழையூத்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • நகையை பறித்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தச்சநல்லூர் சிதம்பரநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மீனா(வயது 55). இவர்களது 25 வயது மகன் சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    நகை பறிப்பு

    நேற்று மதியம் மீனா தனது மகனுடன் தாழையூத்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மட்' அணிந்தபடி வந்த மர்ம நபர் ஒருவர் சாலையின் இருபுறமும் நோட்டமிட்டுள்ளார்.

    அப்போது மீனாவை தவிர வேறு மக்கள் நடமாட்டம் அந்த சாலையில் இல்லை என்பதை அறிந்த அந்த நபர் மீனாவின் அருகில் சென்றுள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடியே, மீனாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க நகையை மர்ம நபர் பறிக்க முயன்றுள்ளார்.

    சி.சி.டி.வி. ஆய்வு

    ஆனாலும் மீனா செயினை கைப்பற்ற முயற்சி செய்துள்ளார். ஒரு கட்டத்தில், அவரது கழுத்தில் கிடந்த செயினை கைப்பற்ற அந்த நபர் மீனாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். பின்னர் 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

    இதுகுறித்து மீனா அளித்த புகாரின்பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை கண்டுபிடி க்க அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×