search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜனவரி 17-ந்தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இயங்காது என அறிவிப்பு
    X

    ஜனவரி 17-ந்தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இயங்காது என அறிவிப்பு

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.
    • பண்டிகை நாளில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.

    இந்த சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள், இஞ்சி, மண்பானை உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொங்கலை முன்னிட்டு விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி 17-ந்தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×