என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் ஐ.டி. ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
- மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வேலையில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஹரிபிரசாத் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
கோவை,
கோவை மதுக்கரை அருகே உள்ள மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார்.
இவரது மகன் ஹரிபிரசாத் (வயது 24). இவர் வீட்டில் இருந்தபடி ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
ஹரி பிரசாத்தின் குடும்பத்தில் கடன் அதிகமாக இருந்தது. ஆனால் வேலையில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
இதன் காரணமாக ஹரிபிரசாத் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணபட்டார்.
சம்பவத்தன்று இவரது தந்தை வேலைக்கு சென்று இருந்தார். தாய் அருகே உள்ள மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஹரிபிரசாத் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட ஹரிபிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






