என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு கடிதம் வழங்கல்
- 210 கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள் மூலம் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கடிதம் வழங்கப்பட்டது.
- டெங்கு ஒழிப்பு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி க்குட்பட்ட 51 வார்டுகளிலும் கொசுவினால் பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர நோய்களை தவிர்த்திட அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூதன முறையில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கடிதம் வழங்கும் நிகழ்ச்சியை இன்று மேயர் சண். ராமநாதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி , ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொசு புகை மருந்து காலை 9மணி முதல் 11மணி வரையிலும் மற்றும் மாலை 3மணி முதல் 5மணி வரையிலும் கொசு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியாக 300 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம் மொத்தம் 210 களப்பணியாளர்களை தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு ஆண்டு முழுவதும் தொடர்ந்து மேற்படி பணி நடைபெற்று வருகிறது.
மேலும் 20 வார்டுகளிலுள்ள 38 தெருக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதியாக கண்டறியப்பட்டு தனிகவனம் செலுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சி பகுதிகளில் தினம்தோறும் 12 காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று டெங்கு ஒழிப்பு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இம்மாநகராட்சி பகுதிகளில் உள்ள 54234 வீடுகளிலும் 210 கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள் மூலம் நூதனமுறையில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கடிதம் வழங்கி அவர்களிடம் கையொப்பம் பெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர் தமிழ்வாணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இதனையடுத்து காந்திபுரம் பகுதியிலுள்ள மழைநீர் வடிகால்கள் ஜே.சி.பி, ஹிட்டாச்சி உள்ளிட்ட கனகரக இயந்திரங்கள் மூலம் தூய்மை பணியாளர்களுடன் சுத்தம் செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநகர்நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, உதவி செயற்பொறியாளர் ரமேஷ் , துப்புரவு ஆய்வாளர் ராமசந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்