என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு கல்லூரியில் விண்வெளியில் இந்தியா கருத்தரங்கம்
- நிலவில் ஆய்வை மேற்கொண்டது.ஆதித்யா-எல்.1 சூரியனை ஆய்வு செய்கிறது.
- இளநிலை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் விண்வெளியில் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
வேதியியல் துறைத்தலை வர் ராஜராஜன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரோசி தலைமை வகித்தார்.வேதியியல் துறை உதவி பேராசிரியர் சித்திரவேல் அறிமுக உரையாற்றினார்.
இதில் சந்திராயன்- 3, ஆதித்யா எல்- 1 என்ற தலைப்பில் சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநரும் சென்னை ஐ.ஐ.டி. கவுரவ பேராசிரியரும், விஞ்ஞானி யுமான பாண்டியன் பேசு கையில், இந்தியா, நிலவின் தென் துருவத்தில் உலகில் முதன்முதலாக கால் பதித்தது. சந்திராயன்-3 என்ற செயற்கைக்கோள் உதவியுடன் விக்ரம் லேண்டரை இறங்க வைத்து அதிலிருந்து பிரக்யான் ரோவர்என்பது நிலவில் ஆய்வை மேற்கொண்டது.ஆதித்யா-எல்.1 சூரியனை ஆய்வு செய்கிறது.
இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், இப்போது இஸ்ரோவில் பல்வேறு ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத் திக்கொண்டு பணியாற்றி வருபவரும் சங்கரன் உங்களுக்கெல்லாம் வழிகா ட்டியாக உள்ளார்.
இளநிலை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இஸ் ரோவில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது என்றார்.
மேலும், மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். முடிவில் வேதியியல் துறை இணைப் பேராசிரியர் ஞானசுந்தரம் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்