search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கல்லூரியில் விண்வெளியில் இந்தியா கருத்தரங்கம்
    X

    கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர் கவுரவிக்கப்பட்டார்.

    அரசு கல்லூரியில் விண்வெளியில் இந்தியா கருத்தரங்கம்

    • நிலவில் ஆய்வை மேற்கொண்டது.ஆதித்யா-எல்.1 சூரியனை ஆய்வு செய்கிறது.
    • இளநிலை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் விண்வெளியில் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    வேதியியல் துறைத்தலை வர் ராஜராஜன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரோசி தலைமை வகித்தார்.வேதியியல் துறை உதவி பேராசிரியர் சித்திரவேல் அறிமுக உரையாற்றினார்.

    இதில் சந்திராயன்- 3, ஆதித்யா எல்- 1 என்ற தலைப்பில் சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநரும் சென்னை ஐ.ஐ.டி. கவுரவ பேராசிரியரும், விஞ்ஞானி யுமான பாண்டியன் பேசு கையில், இந்தியா, நிலவின் தென் துருவத்தில் உலகில் முதன்முதலாக கால் பதித்தது. சந்திராயன்-3 என்ற செயற்கைக்கோள் உதவியுடன் விக்ரம் லேண்டரை இறங்க வைத்து அதிலிருந்து பிரக்யான் ரோவர்என்பது நிலவில் ஆய்வை மேற்கொண்டது.ஆதித்யா-எல்.1 சூரியனை ஆய்வு செய்கிறது.

    இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், இப்போது இஸ்ரோவில் பல்வேறு ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத் திக்கொண்டு பணியாற்றி வருபவரும் சங்கரன் உங்களுக்கெல்லாம் வழிகா ட்டியாக உள்ளார்.

    இளநிலை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இஸ் ரோவில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது என்றார்.

    மேலும், மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். முடிவில் வேதியியல் துறை இணைப் பேராசிரியர் ஞானசுந்தரம் நன்றி கூறினார்.

    Next Story
    ×