என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை, தென்காசியில் சுதந்திர தின விழா: தொழிலாளர்களுக்கு தேசிய கொடி வழங்க வேண்டும்- நிறுவனங்களுக்கு, தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் நிறைமதி வேண்டுகோள்
- அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி என்ற இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது.
- அனைத்து தொழிற்சாலை நிர்வாகிகளும் தொழிலாளர்களுக்கு தேசிய கொடிகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்றுதொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் க.நிறைமதி கூறியுள்ளார்.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு தேசிய கொடி வழங்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் க.நிறைமதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதந்திர தின விழா
இதுதொடர்பாக நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் க.நிறைமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் நாளை (திங்கட்கிழமை) வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி என்ற இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது. அதில் அனைத்து தொழிற்சாலைகளிலும் நிர்வாகத்தினர் கொடியேற்றுவது மட்டுமின்றி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வீடுகளிலும் கொடியேற்ற ஏதுவதாக தேசிய கொடிகளை வழங்கி ஊக்குவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தேசிய கொடி வழங்க வேண்டும்
அதன்படி நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகிகளும் தங்களது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேசிய கொடிகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
மேலும் தொழிற்சாலை நிறுவனங்கள் சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடப்பட்ட விவரங்களை மாவட்ட வாரியாக புகைப்படத்துடன் கூடிய அறிக்கையை நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்