search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் பகுதியில்  மணிமுக்தா ஆற்றில்  மணல் கொள்ளை
    X

    சித்தலூர் பகுதியில் மணிமுக்தா ஆற்றில் மணல் அள்ளிய பள்ளத்தை படத்தில் காணலாம்.

    தியாகதுருகம் பகுதியில் மணிமுக்தா ஆற்றில் மணல் கொள்ளை

    ஆற்றில் இரவு நேரங்களில் மினி லாரியில் மணலை அள்ளி 1 யூனிட் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உற்பத்தியாகி வரும் மணி ஆறு மற்றும் முக்தா ஆறும் இணைந்து மணிமுக்தா அணைக்கு தண்ணீர் வருகிறது. கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சி பகுதியில் ஆற்றின் குறுக்கே மணிமுக்தா அணை கட்டப்பட்டுள்ளது.

    இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது சூளாங்குறிச்சி, பல்லகச்சேரி, வீரசோழபுரம், மடம், சித்தலூர், வடபூண்டி, கொங்கராயபாளையம், உடையனாச்சி, கூத்தக்குடி ஆகிய ஊராட்சிகளில் வழியாக தண்ணீர் கடலூர் மாவட்டத்தை சென்றடைகிறது. இந்த ஆற்றில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழைக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றுப்பகுதியில் மணல் வளம் செழிப்பாக காணப்பட்டது. தற்போது மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் சமூக விரோதிகள் ஆற்றில் மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர் .

    இவ்வாறு தியாகதுருகம் அருகே சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் அருகேஆற்றில் இரவு நேரங்களில் மினி லாரியில் மணலை அள்ளி 1 யூனிட் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    மேலும் புது உச்சிமேடு பகுதியில் சாக்குப் பையில் மணல்களை மூட்டை கட்டி மோட்டார் சைக்கிள்களில் எடுத்துச்சென்று விற்பனை செய்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து ஆற்றில் இருந்து வாகனங்கள் மூலம் சமூகவிரோதிகள் ஆற்றில் மணல் கொள்ளை அடிப்பதை தடுக்க வேண்டும். என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×