search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் மாவட்ட செயலாளர்கள் மோதல்
    X

    ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் மாவட்ட செயலாளர்கள் மோதல்

    • ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • மாவட்ட செயலாளர்கள் சிலர் தங்களுக்கு ‘சீட்’ கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.

    சென்னை:

    பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஓ.பி.எஸ். தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் அவருக்கு ராமநாதபுரம் மட்டும் ஒதுக்கப்பட்டு இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் தொகுதி பங்கீட்டில் முறையாக செயல்பட வில்லை என்ற அடிப்படையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை எழும்பூரில் உள்ள மண்டபத்தில் கூட்டினார். அதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஓ.பி.எஸ். முன்னிலையில் மோதிக் கொண்டனர். மாவட்ட செயலாளர்கள் சிலர் தங்களுக்கு 'சீட்' கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.

    ஆனால் ஒரு தொகுதி மட்டுமே பா.ஜ.க. தரப்பில் கொடுக்க முன் வந்ததால் மாவட்ட செயலாளர்கள் கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி, எம்.எம்.பாபு ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஓ.பி.எஸ்.முன்பாகவே இருவரும் கடுமையான வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஓ.பி.எஸ். மற்றும் மாவட்ட செயலாளர் சதீஷ் ஆகியோர் அவர்களை விலக்கி சமாதானப்படுத்தினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×