search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் லாட்டரி  விற்ற 4 பேர் கைது
    X

    பண்ருட்டியில் லாட்டரி விற்ற 4 பேர் கைது

    லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த தை பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கைப்பற்றிஅவர்கள் இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி போலீசார் தீவிர லாட்டரி, கஞ்சா ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி அவுலியா தர்கா எதிரில் டீக்கடை நடத்தி வரும் அப்துல் மத்தின் ( வயது 48) என்பவரும், டீக்கடைஊழியர் பண்ருட்டிஆர். எஸ். மணி நகர்ஜோதி (வயது 49) ஆகிய இருவரும் நல்ல நேரம் லாட்டரி சீட்டு 10, குமரன் லாட்டரி சீட்டு 5,தங்கம் லாட்டரி சீட்டு 5 ஆகிய லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த தை பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கைப்பற்றிஅவர்கள் இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதே போல பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு அருகில் பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்த முகமது உவைஸ் (வயது 22),சையத் இப்ராஹிம் (வயது 33)ஆகிய இருவர்களும் நல்லநேரம் லாட்டரி சீட்டு 14, தங்கம் லாட்டரி சீட்டு 5,குமரன் லாட்டரி சீட் 10 ஆகிய லாட்டரி சீட்டு வைத்திருந்தவர்களை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×