என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மரக்காணம் அருகே நகர் கிராமத்தில் சாலையில் தேங்கியுள்ள கழிவு நீர்வாய்க்கால் கட்டித்தர மக்கள் கோரிக்கை
- சாக்கடை நீர் கழிவுநீர் செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி அடைகிறார்கள்..
- மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். .
விழுப்புரம்::
மரக்காணம் அருகே நகர் கிராமத்தில் சாக்கடை நீர் கழிவுநீர் செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி அடைகிறார்கள். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நகர் கிராமத்தில் 5000 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் பெரும் பாலானோர் விவசாயிகள் இங்கு ஊரின் நடுவில் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பெருமாள் கோவில் எதிரில் சாலையில் தேங்கி நிற்கிறது சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, இந்த சாலையில் கழிவுநீர் வாய்க்கால் கட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு முறை மனு மற்றும் புகார் கொடுத்தனர். இருப்பினும் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட வில்லை. எனவே, புதியதாக பொறுப்பேற்றுள்ள விழுப்புரம் மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு நகர் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்