என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிடப்பில் போடப்பட்ட பணிகளை நிறைவேற்றாவிட்டால் கருமத்தம்பட்டி நகராட்சியை முற்றுகையிட்டு போராடுவோம்- அ.தி.மு.க.வினர் அறிவிப்பு
- கருமத்தம்பட்டி நகராட்சி கமிஷனரிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் மனு
- நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருமத்தம்பட்டி,
கருமத்தம்பட்டி நகராட்சியில் கிடைக்கும் பல்வேறு பணிகளை விரைந்து முடிக்க கோரி கருமத்தம்பட்டி அ.தி.மு.க. நகரமன்ற செயலாளர் ஆதவன் கே.பிரகாஷ் (10-வது வார்டு உறுப்பினர்) தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நகராட்சி அலுவலகத்தில் ஆணையரை சந்தித்து மனு கொடுக்க வந்தனர். அப்போது ஆணையர் இல்லாததால் நகராட்சி துணைத்தலைவர் யுவராஜிடம் மனு அளித்தனர்.
அந்தமனுவில் கூறியிருப்பதாவது:-
கருமத்தம்பட்டி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் ஒரு சில வார்டுகளில் தண்ணீர் வசதி, சாக்கடை வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறாமல் உள்ளது. மேலும் பல்வேறு வார்டு பகுதிகளில் காங்கிரீட் சாலை அமைக்க சாலைகளை பெயர்த்து பல நாட்களாக சாலைகளை சீரமைக்கப்படாமல் உள்ளது.
சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளை சரிவர அல்லப்படாமல் இருப்பதாலும், தற்போது சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் உடனடியாக மழைநீர் வடிகால் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மேலும் கிடப்பில் கிடைக்கும் பணிகளை விரைந்து முடிக்கா விட்டால் அ.தி.மு.க. சார்பில் கருமத்தம்பட்டி நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக என அறிவித்தனர்.
நிகழ்ச்சியில் சோமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சூப்பர் காட்டன் தங்கவேல், கருமத்தம்பட்டி நகராட்சி 13-வது வார்டு உறுப்பினர் லாதமணி, 24-வது வார்டு உறுப்பினர் அருணா தேவி, 14-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார், கருமத்தம்பட்டி நகராட்சி அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






