search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு மருத்துவக்கழிவுகளை ஏற்றி வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்- போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்  எச்சரிக்கை
    X

    தூத்துக்குடியில் லாரி, சரக்கு வாகன உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு நடத்திய காட்சி.


    தூத்துக்குடி மாவட்டத்திற்கு மருத்துவக்கழிவுகளை ஏற்றி வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்- போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை

    • அண்டை மாநிலங்களிலிருந்து மருத்துவக் கழிவுகள்,கோழி கழிவுகள் போன்றவற்றை வாகனங்களில் ஏற்றி வரக்கூடாது.
    • கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் மனித உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகள், நெகிழி குப்பைகள், சாயக்கழிவுகள், கோழிக்கழிவுகள் மற்றும் மீன்கழிவுகள் போன்றவை கொட்டப்படுகிறது.

    இதனை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் லாரி, சரக்கு வாகன உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து உட்கோட்ட காவல் துணை சூப்பிரண்டுகள் மற்றும் போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் டி.எஸ்.பி.க்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளதாவது;- கேரளா உள்ளட்ட அண்டை மாநிலங்களிலிருந்து மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கோழி கழிவுகள், மீன் கழிவுகள் போன்றவற்றை வாகனங்களில் ஏற்றி வரக்கூடாது. மேலும் அந்த கழிவுகளை ஏற்றி வந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களிலோ, தனியாருக்கு சொந்தமான இடங்களிலோ கொட்டவோ, குழி தோண்டி புதைக்கவோ கூடாது.

    அவ்வாறு சட்டவிரோதமாக கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×