search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டவுன் ரதவீதிகளில் திரும்பிய இடமெல்லாம் மனித தலைகள்- லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
    X

    தேரோட்டத்தை காண குவிந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

    டவுன் ரதவீதிகளில் திரும்பிய இடமெல்லாம் மனித தலைகள்- லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

    • சுமார் 12 மணி அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் 4 ரத வீதிகளிலும் திரண்டனர்.
    • வானிலை மையம் இன்று முதல் 4-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடை பெற்றது.

    காலை 8.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கிய நிலையில் பல்லாயிரக்க ணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வானம் அதிர கோஷங்களிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிறிது நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகமானது.

    ஒரு கட்டத்தில் 4 ரத வீதிகளிலும் தார் சாலையை பார்க்க முடியவில்லை. திரும்பி பார்க்கும் இட மெல்லாம் பக்தர்கள் தலைகள் தான் தென்பட்டது. சுமார் 12 மணி அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் 4 ரத வீதிகளிலும் திரண்டனர். வெயிலின் தாக்கமும் குறைந்து காணப்பட்டது.

    ஏற்கனவே வானிலை மையம் இன்று முதல் 4-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப் பட்டது. வெயிலின் தாக்கம் மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் தேரோட்ட விழாவில் மிக அதிக அளவில் பங்கேற்றனர். அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தின் காரணமாக டவுன் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து சொக்கப்பனை முக்கு வரையிலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதே போல் டவுன் ஆர்ச்சில் இருந்து அருணகிரி தியேட்டர் வழியாக மவுண்ட் சாலையில் கணேஷ் தியேட்டர் வரையிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    Next Story
    ×