என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வீடு புகுந்து நகை -பணம் திருட்டு
- டிராயரில் இருந்த நகை மற்றும் ரூ.3 ஆயிரத்து 500 ரொக்கத்தை திருடினர்.
- சத்தம் கேட்டு குடும்பத்தினர் முழித்து மர்ம நபர்களை விரட்டி சென்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி (வயது 35). சம்பவத்தன்று இரவில் காயத்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டில் பின்பக்க வாசல் வழியாக புகுந்தனர். பின்னர் வீட்டின் ஒரு அறையில் டிராயரில் இருந்த நகை மற்றும் ரூ.3500 ரொக்கத்தை திருடினர். தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்த காயத்ரி கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்தனர். திடுக்கிட்டு முழித்த காயத்ரி திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு குடும்பத்தினர் முழித்து மர்ம நபர்களை விரட்டி சென்றனர்.
ஆனால் அதற்குள் அவர்கள் தப்பி தலைமறைவாகி விட்டனர்.இது குறித்து காயத்ரி வல்லம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்