search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு
    X

    வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

    • பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை தென்றல் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியங்கா ( வயது 31). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது நள்ளிரவில் வீட்டின் மேல் மாடி வழியாக புகுந்த மர்ம நபர்கள் பீரோவை திறந்து வளையல், மோதிரம், தோடு என 10 பவுன் தங்க நகைகளை திருடி கொண்டு தப்பி சென்றனர்.

    இந்த நிலையில் காலையில் எழுந்த பிரியங்கா பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் தான் வைத்திருந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×