search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதைவேடம் அணிந்து மகிழ்ந்த பெற்றோர்
    X

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதைவேடம் அணிந்து மகிழ்ந்த பெற்றோர்

    • பாலகோபாலருக்கு அபிஷேகம், ஜெகன்னாதருக்கு தீபராதனை வழிபாடு
    • 3 நாள் திருவிழாவில் திரளான பக்தர்கள் திரண்டு வந்த சாமி தரிசனம்

    பீளமேடு,

    கோவை மாவட்டத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள ஸ்ரீஜெகந்நாதர் (ஹரே கிருஷ்ணா) ஆலயத்தில் இன்று முதல் 3 நாட்கள் விழா நடக்கிறது.

    அதிகாலை 4.15 மணிக்கு நடை திறக்கப்பட்டு மங்கள ஆரத்தியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அகண்ட நாம சங்கீர்த்தனம், பகவான் கிருஷ்ணரின் லீலைகள் குறித்த சொற்பொழிவுகள், பாலகோபாலருக்கு அபிஷேகம், ராதாகிருஷ்ணருக்கு வழிபாடுகள், கோபூஜை, பகவான் ஜெகன்னாதருக்கு தீபராதனை, கலைநிகழ்ச்சிகள், அஷ்டோத்திர மகா கலசாபிஷேகம் மற்றும் அன்னதானம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடந்தன.

    கோவை சந்திரா நாடகக் குழுவினர், பூரி ஜெகன்நாதர் தோன்றிய லீலையைச் சித்தரிக்கும் வகையிலான நாடகத்தை அரங்கேற்றினர். பால்யபருவ கிருஷ்ண லீலைகளை விளக்கும் சிறுவர்களின் நாடகம் அனைவரையும் ஈர்த்தது. சிறுகுழந்தைகளின் மாறு வேடப் போட்டியும் நடை பெற்றது. குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து பெற்றோர் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தனர். இது அனைவரையும் கவருவதாக அமைந்திருந்தன. மேலும் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நள்ளிர வில் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்ததை நினைவு கூறும் வகையில், இரவு 10.30 மணிக்கு பாலகோபாலருக்கான மகா கலசாபிஷேககம், சிறப்பு ஆரத்தி நடக்கிறது.

    விழாவையொட்டி பீளமேடு போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல கோவையில் உள்ள பெருமாள் கோவில்கள் உள்பட பல கோவில்களில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டா டப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்கள் படைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. தனியார் அமைப்பு கள் சார்பிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதில் உறியடி நிகழ்ச்சிகள் நடந்தன.

    பக்குவமான கேள்விகளும் பக்குவமான பதில்களும் என்ற தலைப்பில் ஆன்மீக கருத்தரங்கமும் நடைபெற்றது. குழந்தைகள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி, கோவை சந்திரா குழுவினரின் நாடகம், சிறப்பு பட்டிமன்றம், மற்றும் உரியடி நிகழ்ச்சிகள் கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி நடைபெற விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.

    இன்றுடன் மூன்று நாட்கள் நாள் முழுவதும் தரிசனத்துக்காக கோவில் திறந்தேயிருக்கும். அது சமயம் பக்தர்களனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    விழாவில் அதிக அளவு பக்தர்கள் கலந்து கொள்வதால் பீளமேடு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

    மேலும் ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு கிருஷ்ணரை வழிபட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×