என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெட்டிச்சாவடியில் மளிகை கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு
- மகாராஜா சம்பவத்தன்று இரவில் மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
- அதிலிருந்து ரூ.9 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடியை சேர்ந்தவர் மகாராஜா (வயது 28). மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவில் தனது மளிகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில் கடைக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பின்னர் பதற்றத்துடன் மகாராஜா உள்ளே சென்று பார்த்தபோது, பணம் வைக்கும் பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிலிருந்து ரூ.9 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து மகாராஜா ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர். பூட்டை உடைத்து கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story






