என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பசுந்தேயிலை கொள்முதல்-கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் அமைச்சர் ஆய்வு
- நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன.
- தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் நஞ்சநாடு மற்றும் இத்தலாா் ஆகிய கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் தரமான பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறதா என்பது குறித்து தமிழக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.
நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன. இத் தேயிலைத் தொழிற்சாலைகளில் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உறுப்பினர்களாக இருந்து தங்களது தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை அந்தந்த கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனா்.
தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. எனவே விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க தரமான பசுந்தேயிலையை கொள்முதல் செய்து தரமான தேயிலைத் தூள் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வின்போது அலுவலா்களுக்கு அமைச்சா் ராமசந்திரன் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநரும், இண்ட்கோசா்வ் முதன்மை செயல் அலுவலருமான மோனிகா ராணா, ஊட்டி வட்டாட்சியா் ராஜசேகா், ஊட்டி ஊராட்சி ஒன்றியதலைவர் மாயன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்