search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிளான நடனப் போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை
    X

    கிராமிய நடனம் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிகள்.


    மாநில அளவிளான நடனப் போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

    • அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா மாநில அளவிலான போட்டி மதுரை விளாச்சேரியில் உள்ள பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.
    • 7 மாணவிகளும் மாநில அளவில் முதலிடம் பிடித்து "கலையரசி" பட்டம் பெற தகுதி பெற்றனர்.

    தென்காசி:

    தமிழக அரசால் நடத்தப்படும், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா மாநில அளவிலான போட்டி மதுரை விளாச்சேரியில் உள்ள பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் அருகே உள்ள வெள்ளகால், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் அனுசுயா பேபி, நந்தனா, ஜனனி, சந்திகா, அனுஷாசெல்வி, வர்ஷா, லலிதா ஆகியோர் கிராமிய நடனம் போட்டியில் கலந்து கொண்டனர். இவர்கள் 7 பேரும் மாநில அளவில் முதலிடம் பெற்று, சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் "கலையரசி" பட்டம், பரிசும் பெற தகுதி உள்ளவராக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சாதனைப்படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×