search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தியர்களின் இதயங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் பிரக்ஞானந்தா - கவர்னர் ஆர்.என்.ரவி
    X

    இந்தியர்களின் இதயங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் பிரக்ஞானந்தா - கவர்னர் ஆர்.என்.ரவி

    • பிடே உலக கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது.
    • இன்று நடந்த டைபிரேக்கரில் நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சென் வென்றார்.

    சென்னை:

    பிடே உலக கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர்.

    இந்த இறுதிப்போட்டியின் முடிவில் நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்நிலையில், உலக கோப்பை செஸ் போட்டியில் 2-வது இடம்பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரக்ஞானந்தா, உங்களின் பிரமிக்கவைக்கும் புத்திக்கூர்மை மிக்க ஆட்டங்களால், ஒவ்வோர் இந்தியரின் இதயத்தையும் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நீங்கள் மறுமலர்ச்சி தன்னம்பிக்கை இந்தியாவின் பிரதிபலிப்பு. இந்த தேசம் உங்களை மிகவும் நேசிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×