search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை பாலாமடையில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் மனு
    X

    கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பாலாமடை ஊர் பொது மக்கள்.

    நெல்லை பாலாமடையில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் மனு

    • பாலாமடையை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
    • சாலையில் படுத்து உருளும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர்.

    நெல்லை பாலாமடையை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல் கொள்முதல் நிலையம்

    எங்கள் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொது கழிப்பிடம், சாலைகள் உள்ள பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதனை வேறு இடத்தில் அமைக்க கோரி ஊர் பொது மக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்திலும், நுகர்பொருள் வாணிப கழக மண்டல பொது மேலாளரிடமும் ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம்.

    மேலும் இதனால் இரு தரப்பினருக்கிடையே பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விரைவில் மாற்று இடத்தில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    மோசமான சாலைகள்

    ராமையன்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு உறுப்பினர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் வந்து கொடுத்த மனுவில், நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல பகுதிகளிலும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது.

    குறிப்பாக பாளை மார்க்கெட் முதல் சீவலப்பேரி, தச்சநல்லூர் முதல் நயினார்குளம் மார்க்கெட், டவுன் மவுன்ட் ரோடு முதல் குன்னத்தூர், பழைய பேட்டை முதல் டவுன் ஆர்ச் வரை மேலும் பால் கட்டளை, அழகநேரி, முக்கிய பஸ் நிலையங்களை சூழ்ந்துள்ள பகுதிகள் என முக்கிய இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது.

    மேலும் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் போதுமானதாக இல்லை. எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலையில் படுத்து உருளும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    Next Story
    ×