என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
    X

    இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

    • கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செ.புதூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி.

    இவருடைய மனைவி மீனா(வயது 23). இவர்களுக்கு 4 வயதில் சிவக்குமார் என்ற மகன் உள்ளான்.

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த மீனா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குமாரசாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த மீனா சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருநீலக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீனா உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மீனாவின் தாயார் மணிமேகலை, திருநீலக்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

    Next Story
    ×