என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் கஞ்சா வியாபாரிக்கு கத்தி குத்து-2 பேர் கைது
- ஆத்திரமடைந்த கார்த்திகேயன், பாலமுருகன் ஆகியோர் அப்சலை கத்தியால் குத்தினர்.
- பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
கோவை,
கோவை உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அப்சல் (19). கஞ்சா வியாபாரி. இவர் சுங்கம் பைபாஸ் ரோட்டில் கஞ்சா வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உக்கடத்தை சேர்ந்த கார்த்திகேயன்(27) மற்றும் பாலமுருகன் (24) ஆகியோர் அப்சலிடம் வாக்குவாதம் செய்தனர் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், பாலமுருகன் ஆகியோர் அப்சலை தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர்.
கைதான 2 பேரும் மீதும் கஞ்சா விற்பனை , திருட்டு என பல்வேறு வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்