search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகூர் காங்கேய சித்தர் பீடத்தில் பவுர்ணமி விழா
    X

    பவுர்ணமி பூஜை விழா நடந்தது.

    நாகூர் காங்கேய சித்தர் பீடத்தில் பவுர்ணமி விழா

    • உலக சிவனடியார் கூட்டத்தினர் திருவாசக முற்றோதல் நடத்தினர்.
    • தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் காங்கேய சித்தர் ஜீவபீடத்தில் திருவாசக முற்றோதல் நாகூர் கொச தெரு என்னும் குயவர் மேட்டு தெருவில் அருள்பாளித்து வரும் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் உலக அமைதி வேண்டி திருநாகை காயாரோகனத்தார் அர்தசாம அடியார் திருக்கூட்டத்தினர், உலக சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் மலேசியாவின் பினாங் நகர உலக சிவனடியார் திருகூட்டத்தினர் திருவாசக முற்றோதல் நடத்தினர்.

    இந்நிகழ்வில் உலக சிவனடியார் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜம்புலிங்கம் மற்றும் மலேசிய பினாங் நகர சிவனடியார் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நாகூர் பிடாரி அம்மன் கோவில் நிர்வாகி கணபதி மற்றும் நாகை சத்ரு சம்ஹார மூர்த்தி ஆலய நிர்வாகி சிங்காரவேலு ஆகியோர் முற்றோதல் செய்த சிவனடியார்களுக்கும் பக்தர்களுக்கும் அன்ன தானம் வழங்கினர்.

    இந்த நிகழ்வை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் இராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், குமார், டாக்டர் அனிதா பழனிவேல் மற்றும் சேலம் வெங்கடேசன், நாகை ஐடிசி நடராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    Next Story
    ×