search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் நடுரோட்டில் தாக்கி கொண்ட நண்பர்கள்
    X

    கோவையில் நடுரோட்டில் தாக்கி கொண்ட நண்பர்கள்

    • சுரேஷ் மது குடிக்க பணம் தருமாறு கைலாஷ்குமாரிடம் கேட்டார்.
    • மோட்டார் சைக்கிளில் உடையாம்பாளையம் பகுதிக்கு நூடுல்ஸ் வாங்க சென்றார்.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் சவுரிபாளையம் பிரிவை சேர்ந்தவர் கைலாஷ்குமார்(22). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் உடையாம்பாளையம் பகுதிக்கு நூடுல்ஸ் வாங்க சென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளின் சாவி தொலைந்து விட்டது.

    இதனையடுத்து கைலாஷ்குமார் தனது நண்பர்களான ராஜேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் அங்கு வந்து மோட்டார் சைக்கிளில் லிப்ட் கொடுத்து கைலாஷ்குமாரை அவரது வீட்டில் விட்டனர்.

    அப்போது சுரேஷ் மது குடிக்க பணம் தருமாறு கைலாஷ்குமாரிடம் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கைலாஷ்குமார் சுரேசை தாக்கினார். பதிலுக்கு சுரேசும், கைலாஷ்குமாரை தாக்கினார்.

    நடுரோட்டில் தாக்கி கொண்டதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில், போலீசார் கைலாஷ்குமார்(22) மற்றும் ராமநாதபுரம் மருதூரை சேர்ந்த பெயிண்டர் சுரேஷ்(33) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×