search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை காவல்துறை பணிக்கு இலவச மாதிரி தேர்வு
    X

    கலெக்டர் தீபக்ஜேக்கப்.

    நாளை காவல்துறை பணிக்கு இலவச மாதிரி தேர்வு

    • இந்த தோ்வு காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.
    • காவல்துறை பணிக்கு தயாராகுபவர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வாணையத்தால் காவல் துறையில் காலியாகவுள்ள 750 சாா்பு ஆய்வாளா் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலா்) பணிக்கான தோ்வு வரும் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் நடத்தப்படவுள்ளது.

    இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக மைய வளாகத்தில் பொது மற்றும் காவல் துறை விண்ணப்பதாரா்களுக்கு இலவச முழு மாதிரித்தோ்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை ) நடைபெறவுள்ளது.

    இத்தோ்வு காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.

    விருப்பமுள்ள தோ்வா்கள் https://forms.gle/F7LLTXNrFonqYRK68 என்ற கூகுள் பாா்ம் லிங்கில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் துறை பணிக்குத் தயாராகும் இளைஞா்கள் தோ்வின் பெயா் மற்றும் தங்களது பெயரை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், விவரங்களை 04362 - 237037 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×