search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா
    X

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலைக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

    தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா

    • நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
    • தஞ்சாவூர் மிஷின் தெருவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ெதற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மிஷின் தெருவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்ப ட்டது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்டிதம்பட்டு ஆர்.கோவிந்தராஜூ, வட்டாரத்தலைவர் ரவிச்சந்திரன், மாநகர, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜே.ஆர். சுரேஷ், மாநகர, மாவட்ட துணைத்தலைவர் செந்தில் நா.பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட ஊடகப்பிரிவுத்தலைவர் பிரபு மண்கொண்டார், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரமேஷ்சிங்கம், மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், மாவட்ட மகளிர் காங்கிரஸ் செயலா ளர்சசிகலா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கதர் வெங்கடேசன், சுவிதா ஞானப்பிரகாசம், செந்தில்குமார், ஐ.என்.டி.யூ பொறுப்பாளர்கள் பாரதிதாசன், மணிவா சகன், சம்பத்குமார், சண்முகநாதன், முகிலன், சிவா, கோபாலய்யர், வி.எஸ்.மாதவன், வரகூர் மீசை முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×