என் மலர்
உள்ளூர் செய்திகள்

டேன்டீ தலைமை அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு
- குன்னூரில் தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்தின் டேன் டீ தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
- மேலும் வனத்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
குன்னூர்,
நீலகிரி, வால்பாறை போன்ற பகுதிகளில் தமிழக அரசின் தேயிலை தோட்ட கழக தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இவை தமிழக அரசின் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
குன்னூரில் தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகத்தின் டேன் டீ தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. டேன் டீ தேயிலை தலைமை அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர்மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் அமைச்சர் டேன் டீ தேயிலை பற்றியும் தேயிலை சந்தையில் எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது என்று விரிவாக கேட்டறிந்தார்.
மேலும் வனத்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டேன் டீ பொதுமேலாளர் அசோக் குமார். டேன் டீ தலைமை அதிகாரி சூப்பிரிட் முகமத். நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரி கவுதம். கோவை மாவட்ட வனத்துறை அதிகாரி ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






