என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
களக்காடு பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழையால் ஆறு, கால்வாய்களில் 'திடீர்' வெள்ளம்
- களக்காடு பகுதியை பொருத்தவரை தென் மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் குளங்கள் நிரம்பவில்லை. பருவமழை கை கொடுக்கா ததால் விவசாய பணிகளை மேற்கொள்வதில் தடை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
- களக்காடு பகுதியில் கடந்த சில நாட்க ளாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மழை தொடர்ந்து நீடிப்ப தால் ஆறு, கால்வாய்களில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.
களக்காடு:
களக்காடு பகுதியை பொருத்தவரை தென் மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் குளங்கள் நிரம்பவில்லை. பருவமழை கை கொடுக்கா ததால் விவசாய பணிகளை மேற்கொள்வதில் தடை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
தண்ணீர் வரத்து
இந்நிலையில் களக்காடு பகுதியில் கடந்த சில நாட்க ளாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மழை தொடர்ந்து நீடிப்ப தால் ஆறு, கால்வாய்களில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே நேற்று இரவில் விடிய, விடிய கனமழை கொட்டியது. மேற்கு தொடர்ச்சி மலையி லும் மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் மூலைக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 140 மில்லி மீட்டரும், அதற்கடுத்தபடி யாக களக்காட்டில் 65 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
மழையின் காரணமாக களக்காட்டில் ஓடும் நாங்கு நேரியான் கால்வாயில் திடீர் வெள்ளம் பாய்ந்தோடி யது. வெள்ளத்தால் களக்காடு-சிதம்பரபுரம் தரை பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு, பாலம் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து நீர்வளத் துறையினரும், நகராட்சி ஊழியர்களும் ஜே.சி.பி.எந்திரத்தின் மூலம், பாலத்தில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபோல கோவில்பத்து, கருவேலங்குளம் பாலங்களிலும் அடைப்புகள் அகற்றப்பட்டது. மேலும் பச்சையாறு, உப்பாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மலையடிவார கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
சிதம்பரபுரத்தில் உள்ள கால்வாய்களில் தூர்வாரப் படாததால், கால்வாய்களில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு, இலவடி அணை யின் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
கால்வாய்களில் வரும் தண்ணீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்வளத்துறையினர் கால்வாய், ஆறுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். களக்காடு தலையணை யில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் கடந்த 7-ந் தேதி முதல் சுற்றுலா பயணி கள் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.
தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் தலையணையை சுற்றி பார்க்க அனுமதி வழங்கப் படும் என்று வனத்துறை யினர் அறிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்