என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை
- காதலியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனவேதனை
- உன்னை நான் வெறுக்கிறேன் என குறுந்தகவல் அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கினார்
கோவை,
கோவை பேரூர் அருகே உள்ள மாதம்பட்டி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுரேந்தர் (வயது 28). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் ஆவாரம்பாளை யத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமாக பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற் பட்டது. இதன் காரணமாக இளம்பெண் சுரேந்தரருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் வாலிபர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று சுரேந்தர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர் தனது காதலிக்கு செல் போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேந்தர் தனது காதலிக்கு உன்னை நான் வெறுக்கிறேன் என் குறுந்தகவல் அனுப்பினார்.
பின்னர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அவர்கள் பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் சுரேந்தரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் அவர் அவருடைய காதலியிடம் 30 நிமிடங்கள் பேசியதும், பின்னர் உன்னை வெறுக்கிறேன் என குறுந்தகவல் அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
போலீசார் தற்கொலை செய்து கொண்ட சுரேந்தரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






