என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கிணத்துக்கடவு அருகே லாரி மீது கார் மோதி தந்தை-மகன் பலி
    X

    கிணத்துக்கடவு அருகே லாரி மீது கார் மோதி தந்தை-மகன் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாய் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிணத்துக்கடவு,

    கேரள மாநிலம் பாலக்காடு, மீனாட்சிபுரம் அருகே உள்ள மன்னூரை சேர்ந்தவர் பரமேஸ்வரன்(வயது45).

    இவரது மனைவி சித்ரா தேவி(39). இவர்களுக்கு மோதிஷ்(19) என்ற மகன் உள்ளார். இவர்கள்கோவை யில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இவர்கள் இன்று அதிகாலை கோவை யில் இருந்து கேரளாவுக்கு காரில் புறப்பட்டனர். காரை மோதீஷ் ஓட்டினார். முன் இருக்கையில் அவரது தந்தை பரமேஸ்வரனும், பின்னால் அவரது தாய் சித்ராதேவியும் இருந்தனர்.

    இவர்களது கார், கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அங்குள்ள பேக்கரி முன்பு உள்ள வளைவையொட்டிய பகுதியில் மரம் ஏற்றி வந்த லாரி ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக கார், லாரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டது.

    காரில் இருந்த 3 பேரும் படுகாயத்துடன் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, காரில் சிக்கிய 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, மோதிசும், அவரது தந்தை பரமேஸ்வ ரனும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது தெரிய வந்தது. சித்ரா தேவி மட்டும் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    உடனடியாக போலீசார் உயிருக்கு போராடிய சித்ரா தேவியை மீட்டு பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இறந்த 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×