என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரிகளை சிறைப்பிடித்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் சாலை மறியல்
- மணல் குவாரிகளால் அப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
- சண்முகம் தலைமையில் மணல் லாரிகளை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள மருதம்பள்ளம், கீழப்பெரும்பள்ளம், மேலபெரும்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளால் அப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே அந்த குவாரிகளை மூட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆக்கூர் அடுத்துள்ளஅப்பரா சப்புத்தூர் தேசிய நெடுஞ்சா லையில் செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் மணல் லாரிகளைசிறை ப்பிடித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்ப ட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் சரவணன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் தெட்சிணாமூர்த்தி, பொருளாளர் பன்னீ ர்செல்வம் மற்றும் விவசா யிகள் கலந்துக் கொண்டனர்.






