search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    • ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு
    • ஆண்கள், பெண்கள் என 1500-க்கும் மேற்பட்ட வர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    பொள்ளாச்சி,

    பி.ஏ.பி. திட்டத்தில் நீர்ப்பற்றாக்குறை உள்ள நிலையில் ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி ஆழியாறு விவசாயிகள் பொள்ளாச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பரம்பிக்குளம் ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டி.எம்.சி. நீரும், கேரளத்திற்கு 19.55 டி.எம்.சி. நீரும் பகிர்மானம் செய்துகொள்ளவேண்டும். பிஏபி திட்டத்தில் தமிழகம் எடுத்துக்கொள்ள வேண்டிய 30.5 டி.எம்.சி. தண்ணீர் தமிழகம் ஒரு ஆண்டு கூட முழுமை யாக எடுத்துக ்கொள்ளமு டியவில்லை.

    ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 டிஎம்சி வரை மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது.இந்த திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால் கடைக்கோடி பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்கும், குடிநீருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.பிஏபி திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து 50 ஆயிரம் ஏக்கரும், திருமூர்த்தி அணையில் இருந்து 3.77 லட்சம் ஏக்கரும் பாசனம் செய்யப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.

    இந்தநிலையில், இங்கி ருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பிஏபி விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இன்று ஒட்டன் சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட கோரிஆழியாறு அணை பாசன விவசாயிகள் ஆண்கள், பெண்கள் என 1500-க்கும் மேற்பட்ட வர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதால் இங்குள்ள 10 சட்டமன்ற தொகுதி விவசாயிகளும் பாதிக்கப்படுவர். எனவே இந்த திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம், இதன் தாக்கம் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என விவசாயிகள் தெரிவி த்தனர்.

    Next Story
    ×