search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை உடன்குடி பகுதி குளங்களுக்கு திருப்பிவிட வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    உடன்குடியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் தாங்கை குளம்.


    கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை உடன்குடி பகுதி குளங்களுக்கு திருப்பிவிட வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்

    • 15 நீர் பிடிப்பு குளங்களை நிரப்ப வேண்டும். எஞ்சிய தண்ணீரை மணப்பாடு கடலுக்கு அனுப்பினால் போதும்.
    • மணப்பாடுகடல்முகம் இயற்கையாக அமைந்து இருப்பதால் பொதுமக்களுக்கு எந்த விதமான இடையூறும் இல்லை.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகள், தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்கால்உபரிநீர் முழுவதையும் குலசை தருவைக்குளம் வழியாக மணப்பாடு கடலுக்கு மட்டும் அனுப்ப வேண்டும்.

    வருடந்தோறும் ஆத்தூர் வழியாக புன்னக்காயல் கடலுக்கு நேரடியாக செல்லும் தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் அளவை முன்கூட்டியே கணக்கிட்டு அதை ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்பே உள்ள

    மருதூர்மேலக்கால் அணைக்கட்டு மூலம் உபரிநீரை தெற்கே திருப்பிஉடன்குடியைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்பு குளங்களான செம்மறி படுகைகுளம், சடையனேரி குளம், தாங்கைக்குளம், அய்யனார்குளம், நரிக்குளம், தண்டுபத்துவடக்குகுளம், மானாட்சிகுளம்,

    குண்டாங்கரைகுளம், சிறுகுளம், இடையர்குளம், தேரிகுண்டாங்கரை உட்பட 15 நீர் பிடிப்பு குளங்களை நிரப்ப வேண்டும். எஞ்சிய தண்ணீரை தாங்கைக்குளம் வழியாக கருமேனிஆற்றில் விட்டு மணப்பாடு கடலுக்கு அனுப்பினால் போதும்.

    மணப்பாடுகடல்முகம் இயற்கையாக அமைந்து இருப்பதால் உடன்குடி சுற்று வட்டார பொதுமக்களுக்கு எந்த விதமான இடையூறும் இல்லை.

    புன்னக்காயல் கடலுக்கு நேர்வழியில் போவதை மாற்றிட முடியும்.

    உடன்குடியைச் சுற்றி மணப்பாடு கடலுக்கு அனுப்பினாலே போதும் ஆனால் அதற்கு முறை யான திட்டமிடலும் செய லாக்கமும் தன் ஊக்கமும் தான் இப்போது அவசியம். ஏனெனில் உடன்குடியில் பாசன குளங்கள் எதுவுமில்லை.

    அனைத்துமே நீர்ப்பிடிப்பு குளங்கள் தான்.பம்புசெட் மூலமேவிவசாயம் நடைபெறுவதால் அவை உறிஞ்சும் தண்ணீரை மேற்கண்ட குளங்கள் மூலமாக வருடந்தோறும் கொடுத்தாலே போதும்.

    எனவே மழையை மட்டுமே எதிர்பார்த்திருக்க அவசியம் இல்லை, 15 நீர் பிடிப்பு குளங்களையும் காப்பாற்ற கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை திருப்பி விட நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×