search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு விவசாயிகள் நேரில் வாழ்த்து
    X

    விவசாயிகள், பல்வேறு பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் அமைச்சரை சந்தித்தபோது எடுத்தபடம்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு விவசாயிகள் நேரில் வாழ்த்து

    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது சொந்த ஊரான தண்டுபத்தில் தங்கி இருந்தபோது விவசாயிகள், பல்வேறு பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்தனர்.
    • மழை காலங்களுக்கு முன்பு உடன்குடி வட்டார பகுதி குளங்கள், குட்டைகள் மற்றும் கால்வாய்களை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டை அமைச்சருக்கு தெரிவித்தனர்.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது சொந்த ஊரான உடன்குடி தண்டுபத்தில் தங்கி இருந்தபோது உடன்குடி வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள், வியாபாரிகள், மற்றும் பல்வேறுபொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் ஆகியோர் நேரில் சென்று அமைச்சருக்கு வாழ்த்துகளையும் பாராட்டையும்தெரிவித்தனர்.

    அப்போது வருகின்ற மழை காலங்களுக்கு முன்பு உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகள் மற்றும் தண்ணீர் வரும் கால்வாய்கள் ஆகியவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தமைக்கும், மேலும் செட்டியாவது ஊராட்சியில் புதியதாக குளம் அமைப்பதற்கும் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தனர். அப்போது செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், கூட்டுறவு சங்க தலைவர் அசாப் அலி, உடன்குடி நகர பஞ்சாயத்து துணை தலைவர் மால்ராஜேஷ் தி.மு.க.வை சேர்ந்த கிழக்குஒன்றிய இளங்கோ, சந்தையடியூர் ரவிராஜா, அஜய், பாய்ஸ், ஜெயபிரகாஷ் உட்பட தி.மு.க.வினர் பலர் உடன் இருந்தனர்,

    Next Story
    ×