search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூர் அருகே விவசாயி மின்சாரம் தாக்கி பலி
    X

    அன்னூர் அருகே விவசாயி மின்சாரம் தாக்கி பலி

    • அறுந்து கிடந்த வயரை மிதித்ததால் பரிதாபம்
    • விவசாயி உடலை பார்த்து உறவினர்கள் கதறல்

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னே கவுண்டன்புதூரை சேர்ந்தவர் கருங்கண்ணன்(வயது67).

    இவர் அந்த பகுதியில் உள்ள பழனிசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த 25 வருடங்களாக விவசாய வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் அந்த பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழைக்கு தோட்டத்தின் வழியே சென்ற மின்சார வயர் ஒன்று அறுந்து கீழே விழுந்து விட்டது. இரவு நேரம் என்பதால் தோட்டத்தில் யாரும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று காலை, கருங்கண்ணன் வழக்கம் போல வேலைக்கு வந்தார். பின்னர் வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டாரை ஆன் செய்வதற்காக பம்ப் செட் அறைக்கு நடந்து சென்றார். அப்போது வயல் வரப்பில் மின்சார வயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல், கருங்கண்ணன் மிதித்து விட்டார்.

    இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து, அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, தோட்டத்தின் உரிமையாளரான பழனிசாமியின் மகன் செல்வராஜ் ஓடி வந்து பார்த்தார். பின்னர் இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். கருங்கண்ணனின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்த கருங்கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு திரண்ட அவரது உறவினர்கள், கருங்க ண்ணன் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×