search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலி
    X

    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலி

    • எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி வடக்கு தெருவைச்சேர்ந்தவர் அந்தோணி அமல்ராஜ் (வயது 32) விவசாயி.

    சம்பவத்தன்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் தஞ்சை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    கரம்பயம் தனியார் கல்லூரி அருகில் சென்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் தலையில் படுகாயமடைந்த மகேந்திரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மகேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×