என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி சாவு
- நெல்லையை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள மேசியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(வயது 62).
- இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. நேற்று வழக்கம்போல் தனது மொபட்டில் தோட்டத்திற்கு சென்ற கிருஷ்ணசாமி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
நெல்லை:
நெல்லையை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள மேசியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(வயது 62). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. நேற்று வழக்கம்போல் தனது மொபட்டில் தோட்டத்திற்கு சென்ற கிருஷ்ணசாமி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது மனைவி அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. உடனே அவர் தோட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு செல்லும் வழியில் கிருஷ்ணசாமி இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது நடத்திய விசாரணையில், நேற்று மதியம் அந்த பகுதியில் பெய்த கனமழையால் தோட்டத்திற்கு செல்லும் வழியில் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை கவனிக்காமல் கிருஷ்ணசாமி சென்றபோது அவரது கால் அந்த கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்