search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமான ஒரு வருடத்தில்  கணவன் -மனைவி தகராறில் விவசாயி  விஷம் குடித்து தற்கொலை
    X

    திருமணமான ஒரு வருடத்தில் கணவன் -மனைவி தகராறில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

    • சந்திரசேகரன் (வயது 33) விவசாயி. இவருக்கும் பிரியங்கா (வயது 23) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    • மன உளைச்சலில் இருந்த சந்திரசேகரன் ரெட்டிசாவடி அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் கிடந்தார்

    கடலூர்:

    புதுச்சேரி மாநிலம் நோணாங்குப்பத்தை ம சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 33) விவசாயி. இவருக்கும் பிரியங்கா (வயது 23) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சந்திரசேகரனுக்கும் பிரியங்காவிற்கும் குடும்ப சண்டை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த சந்திரசேகரன் ரெட்டிசாவடி அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள நிலத்தில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் சந்திரசேகரனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    அப்போது சந்திரசேகரனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே திருமணமான ஒரு வருடத்தில் கணவன் -மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக கணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபர ப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×