search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு- கலெக்டர் தகவல்
    X

    தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு- கலெக்டர் தகவல்

    • பள்ளிப்படிப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கு நாளை வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • சிறுபான்மையின மாணவ- மாணவிகள் மேற்படி காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

    தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1-ம் வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை ( தொழில்கல்வி தொழில்நுட்பக் கல்வி மருத்துவம் உட்பட ) படிக்கும் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ -மாணவிகளிடமிருந்து 2022-23-ம் ஆண்டுக்கு பள்ளி படிப்பு, பள்ளி மேல் படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் ஆன கல்வி உதவி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி பள்ளிப்படிப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கு நாளை வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பள்ளி மேற்படிப்பு உதவி தொகைக்கு வருகிற 31-ந் தேதியும், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை 31-ந் தேதியும், பேகம் ஹஜ்ரத் மஹால் தேசிய கல்வி உதவித்தொகைக்கு நாளை வரையும் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    எனவே தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மேற்படி காலக்கெ டுவுக்குள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×