search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
    X

    தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை

    • மோகன்குமார் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்
    • இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் பால முருகன். இவரது மகன் மோகன் என்ற மோகன் குமார் (வயது 22).

    அவர் வீட்டு மாடியில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வந்தார். இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்த தாக கூறப்படுகிறது. மோகன்குமார் வேலை முடிந்து இரவு நஞ்ச கவுண்டன் பாளையத்தில் உள்ள வீட்டில் தங்கி வந்தார்.

    இந்த நிலையில் மோகன் குமார் நஞ்சகவுண்டன் பாளையத்தில் உள்ள வீட்டில் இரவு தூங்க சென்றார். காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவி னர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டு கதவை உடைத்து சென்று பார்த்தனர்.

    அப்போது மோகன்குமார் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்.இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×