search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார்சைக்கிள் கொள்ளையன் சிக்கினார்
    X

    மோட்டார்சைக்கிள் கொள்ளையன் சிக்கினார்

    • ஈரோட்டில் போலீசார் வாகன சோதனையில் மோட்டார்சைக்கிள் கொள்ளையன் சிக்கினார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவரை நிறுத்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    போலீஸ் விசாரணையில் அவர் வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த முருகன் (27) என்பதும் அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் திருடி கொண்டு வந்ததும் தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு முனிசிபல் காலனியில் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை முருகன் திருடியது தெரியவந்தது.

    மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த போது தான் முருகன் போலீசார் வாகன சோதனையில் சிக்கினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

    அவர் மீது ஏற்கனவே இதுபோன்ற பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×