search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தற்கொலை
    X

    வாலிபர் தற்கொலை

    • அறையில் முரளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முரளி எதற்காக இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    திருச்சி மாவட்டம் பெல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முரளி (55). இவர் வேலை விஷயமாக அடிக்கடி ஈரோட்டிற்கு வந்து செல்வார். இதற்காக ஈரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் தங்குவது வழக்கம். அதேப்போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முரளி ஈரோடுக்கு வந்துள்ளார். எப்போதும் தங்கும் லாட்ஜில் வந்து லாட்ஜ் மேலாளரிடம் ஒரு நாள் தங்குவதாக கூறி அறை எடுத்து தங்கி உள்ளார்.

    ஆனால் 2 நாட்களாகியும் அவர் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த மேலாளர் இளங்கோவன் அவர் தங்கி இருக்கும் வரைக்கும் சென்று கதவைத் தட்டி உள்ளார். ஆனால் பதில் எதுவும் வரவில்லை.

    இதனால் விபரீதம் நடந்துள்ளதை உணர்ந்த மேலாளர் லாட்ஜில் வேலை பார்க்கும் பணியா ளர்களைக் கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்குள்ள அறையில் முரளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீஸ் அடுத்த தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முரளி எதற்காக இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×