என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வடமாநில தொழிலாளி திடீர் சாவு
- மயங்கி விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த தொழிலாளியை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
- பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
மேற்குவங்க மாநிலம் 24 பர்கானாஸ் சித்தா கிராமம் பகுதியை சேர்ந்தவர் காளிசரண்பஹார். இவர் பெருந்துறை, பணி–க்கும்பாளையம் பகுதியில் மனைவி, மகள் மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார்.
கடந்த 3 மாதங்களாக மகன்கள் சேகர்பகர், சசாங்காபகர் ஆகியோருடன் பெருந்துறை பகுதியில் கட்டிட கூலி வேலை செய்து வந்தார்.
இதில் மகன் சேகர்பகர்க்கு அடிக்கடி நெஞ்சுவலி வந்து உள்ளது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம்போல பெருந்துறை குன்னத்தூர் ரோடு பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென சேகர்பகர் மயங்கி விழுந்துள்ளார். பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த அவரை உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்