search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளை முனிசாமி கோவிலில் பொங்கல் விழா
    X

    வெள்ளை முனிசாமி கோவிலில் பொங்கல் விழா

    • கோட்டைகாட்டுவலசு வெள்ளை முனிசாமி கோவில் கணபதி ஹோம பூஜையுடன் பொங்கல் விழா தொடங்கியது.
    • சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை, மஹா தீபாராதனை நடைபெற்றது.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே கொந்தளம் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை காட்டுவலசில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான வெள்ளை முனிசாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொங்கல் திருவிழா கொண்டாடுவது நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழா நேற்று கணபதி ஹோம பூஜையுடன் பொங்கல் விழா தொடங்கியது. காலை 10 மணியளவில் காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து முனிக்கு அபிசேகம் செய்தனர்.

    மதியம் பொங்கல் வைத்து வெள்ளைமுனிக்கு படையலிட்டு பூஜை செய்தனர். மாலை கிடாய் வெட்டினர். அதனை தொடர்ந்து வெள்ளை முனிக்கு சிறப்பு அபிசேகம், நடைபெற்றது.

    பின்னர் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை, மஹா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

    Next Story
    ×