search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டு வியாபாரி தற்கொலை
    X

    மாட்டு வியாபாரி தற்கொலை

    • ஷேக் தாவூத் லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். மேலும் மாட்டு வியாபாரமும் செய்து வந்துள்ளார்.
    • மாடு வியாபாரம் செய்ததில் கடன் இருந்ததாக தெரிகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடு த்துள்ள ராமபையலூரை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (53). இவரது மனைவி ஷஜாதி (38). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    ஷேக் தாவூத் லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். மேலும் மாட்டு வியாபாரமும் செய்து வந்துள்ளார். மாடு வியாபாரம் செய்ததில் கடன் இருந்ததாக தெரிகிறது.

    கடன் கொடுத்த வர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த முடியவி ல்லையே என அவர் மனைவியிடம் அடிக்கடி புலம்பி வந்துள்ளார். கடனை திருப்பி கொடுத்து விடலாம் என அவரும் கணவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று அதிகாலையில் ஷஜாதி பூப்பறிக்கும் வேலைக்கு சென்று விட்டார். ஷேக்தாவூதும் வியாபாரத்துக்கு செல்வதாக கூறி சென்று விட்டார்.

    இந்நிலையில் கொளு ஞ்சானூர் குளத்துமேட்டின் அருகில் ஷேக் தாவூத் மயங்கி கிடப்பதாக அப்பகு தியை சேர்ந்த ஒருவர் போன் மூலமாக ஷஜாதிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து ஷேக் தாவூத் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு சத்தியம ங்கலம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஷேக் தாவூத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×