என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற 4 பேர் கைது
- போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஆப்பக்கூடல், ஈரோடு டவுன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப ட்டனர்.
அப்போது ஈரோடு-கொடுமுடி ரோடு, ஆப்ப க்கூடல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்ய ப்பட்ட கஞ்சா எனும் போதைப் பொருள்களை விற்பனை செய்து கொண்டி ருந்த சத்தியமங்கலம் கட ம்பூர் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 22), நாம க்கல் மாவட்டம் குமாரபா ளையம் ஆனந்தராஜ், மர ப்பாலம் சண்முகம் மகன் தமிழ்ச்செல்வன் (31), வெண்டிபாளையம் நடராஜன் மகன் கவுதம் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 52.1 கிலோ கஞ்சா எனும் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






